செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்.
- புதிதாக பதவியேற்ற மேயரிடம் பொதுமக்கள் நேரில் மனு.
திருநெல்வேலி மாநகராட்சியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மேயர் - பொதுமக்கள் சந்திக்கும் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் இல்லாததாலும், கொரோனா ஊரடங்கு காரணங்களாலும் இந்த கூட்டம் முறையாக நடைபெறவில்லை.
இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாநகராட்சி புதிய மேயராக திரு. சரவணன் பதவியேற்றுள்ளதை தொடர்ந்து, நேற்று முதல் மீண்டும் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் கோரிக்கை மனு வாங்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேயரிடம் நேரில் வழங்கினார்கள்.
இதில் குடிதண்ணீர் பிரச்சினை, குடிநீர் குழாய் உடைப்பு பிரச்சினை, சாக்கடை, கழிப்பறை, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி நிறைய மனுக்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Image source: dailythanthi.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.