Logo of Tirunelveli Today

ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

August 13, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
  • இந்த குறைதீர்க்க கூட்டத்தில் தங்களுடைய குறைபாடுகளை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

திருநெல்வேலி மாவட்டம் சனிக்கிழமை அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஆகஸ்ட் மாத பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தம்முடைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

13-8-2022 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பொதுவிநியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற இருக்கின்றது.

குறைதீர் கூட்டத்தில் முகவரி மாற்றம் ,புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்வோர், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், அட்டை கோருதல் ,பெயர் நீக்குதல் , குடும்ப அட்டை முகவரி மாற்றம், , கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், அத்தியாவசிய பொருட்களின் தரம் போன்ற அனைத்துக்கும் புகார் அளிக்க விரும்புபவர்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் .

புதிய அட்டை பெற விரும்புவோர் குறைதீர்க்க கூட்டத்தில் விண்ணப்பம் செய்யவும். பிறப்பு இறப்பு சான்று, ஆதார் அட்டை , கைபேசி , குடியிருப்புச் சான்று ஆகியவற்றை எடுத்து வர வேண்டும. புகார்களுக்கு கட்டுப்பாட்டு அறை 9342471314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify