Logo of Tirunelveli Today

நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி

August 24, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
  • கிராமத்தை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தருவோம் என மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு தலைமையில் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராமத்தை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தருவோம் என மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டி பஞ்சாயத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நெல்லை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் கிராமங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியும் தொடங்கி வைத்தார் .

அப்பொழுது அவர் தெரிவித்ததாவது;

நம்ம ஒரு சூப்பர் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் தூய்மையாக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தின் மூலம் நடைபெறக்கூடிய செயலாக்கங்கள் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது, வீட்டில் உள்ள கழிவு நீரை வீட்டு தோட்டத்தில் பயன்படுத்துவது இல்லை என்றால் வீட்டில் உறிஞ்சு குழி அமைத்து கழிவு நீரை வெளியேற்றுவது, பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்பது குறித்த மக்களிடம் ஒரு விழிப்புணர்வு பெறவேண்டும்.

கிராமத்தை சேர்ந்த அனைவரும் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பேசினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனகராஜ் , பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே .எஸ். தங்கபாண்டியன், துணைத் தலைவர் முரளிதரன் , வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் , ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify