Logo of Tirunelveli Today

ஓம் சிவனடி போற்றி போற்றி - 9-8-2022 ‌ செவ்வாய்க்கிழமை பிரதோஷ தினம்

August 8, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் சிறப்பாக பிரதோஷம் வழிபாடு கொண்டாடப்படுகிறது.

சிவனும் பார்வதியும் ஒன்றாக இணைந்து ஆடுகின்ற நடன காட்யை நாம் கண்டு பேரானந்தம் கொள்ளும் திருநாள் பிரதோஷம். சிவனுக்காக வேண்டுகின்ற ஒரு தினம் தான் பிரதோஷம் மாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் பிரதோஷ நேரம்.

அந்த நேரத்தில் சிவனுக்கு நடைபெறும் பூஜையை கண்ணால் தரிசிப்பது மிகவும் சிறப்பு.மனதில் ஒரு காரியத்தை நினைத்து விரதம் இருந்தால் காரியம் ஜெயமாகும் .

சிவனுடைய எதிரே இருக்கும் நந்தியின் காதில் நம்முடைய வேண்டுதலை சொன்னால் நந்தி பகவான் சிவபெருமானிடத்தில் சொல்ல நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்கும் .

108 முறை ஓம் சிவாய நமஹ எனும் சிவாய மந்திரத்தை மனதில் நிறுத்தி சொல்லுதல் பலன் தரும்.

இதனால் ஏற்படும் தெய்வீக பலன் தம்பதியரின் மனதில் இருக்கும் வீண் குழப்பங்கள் தீரும் .ஒற்றுமையோடு இருப்பர். மனச்சுமைகள் விலகும். வாழ்க்கையில் தம்பதியர் ஒற்றுமையோடு வாழ்வதற்கு பிரதோஷ வழிபாடு நிச்சயம் பலனளிக்கும்.

பிரதோஷம் அன்று நாம் சிவபெருமானை வணங்கி வழிபட்டால் உடலில் இருக்கும் பிணி நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும். சுபிட்சம் உண்டாகும். தொழில் விருத்தி, குழந்தை பேறு ,செல்வம் சேர்க்கை என நாம் நினைக்கும் அனைத்தும் ஜெயமாகும். பிரதோஷம்தோறும் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் வணங்கி வரவும்.

பிரிந்த தம்பதியர் பிரதோஷம் அன்று வில்வ இலை அர்ச்சனைக்கு கொடுத்து வரவும். தொடர்ந்து 5 பிரதோஷங்கள் 2 நெய் அகல் தீபம் ஏற்றி வர ..கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும் .

ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை 108முறை சொல்லி, வில்வ தழை சிவபெருமானுக்கு அர்ச்சனைக்கு கொடுத்து சிவனை வேண்டி அன்றைய தினத்தில் விரதம் இருந்தால், பாவங்கள் அனைத்தும் விலகி புண்ணியங்கள் அனைத்தும் பெற்று வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெறுவோம். எதிர்மறை சக்திகள் மறைந்து நேர்மறை சக்திகள் நமக்குள் கிடைத்து வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் நாம் பெற்று பிறந்த வாழ்வின் பயனை நிறைவு செய்வோம்.

Image source: dinakaran.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify