Logo of Tirunelveli Today

பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் 10 லட்சம் வைப்புநிதி வங்கி கணக்கு புத்தகம் என பல்வேறு சலுகைகள் 13 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

May 31, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு பிரதமர் பராமரிப்பு திட்டத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • 10 லட்சம் வைப்பு நிதி வங்கி கணக்கு புத்தகம் உட்பட பல்வேறு சலுகைகள் கலெக்டர் விஷ்ணு அப்துல்வஹாப் எம்எல்ஏ வழங்கினார்.

இன்றைய குழந்தைகள் நாளைய வருங்கால தூண்கள் . அக்கண்மணிகள் தெருவில் சிதறிய நெல்மணிகளாக இல்லாமல் நெற்களஞ்சியத்தில் இருக்க வேண்டிய பொன்மணிகளாக மாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி நலத்திட்டம் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கலெக்டர் விஷ்ணு, அப்துல் வஹாப் எம் எல் ஏ ஆதரவற்ற 13 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மாநகராட்சி மேயர் பி எம் சரவணன் துணைமேயர் கே ஆர் ராஜு ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமர் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவிக்கான பத்திரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

புத்தகப்பை , பிரதமர் மந்திரி பாதுகாப்பு திட்டம் குறித்த கையேடு, 5 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு அட்டை, பிரதம மந்திரி பாதுகாப்பு சான்றிதழ், கல்வி உதவித்தொகை, 10 லட்சத்திற்கான வைப்பு நிதி செலுத்தப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை 13 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது .

நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி பிற்படுத்தப்பட்டோர் இயக்குனர் உஷா தேசிய தளவியல் மேலாளர் தேவராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify