செய்திக்குறிப்புகள்:
- கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகளுக்கு பிரதமர் பராமரிப்பு திட்டத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- 10 லட்சம் வைப்பு நிதி வங்கி கணக்கு புத்தகம் உட்பட பல்வேறு சலுகைகள் கலெக்டர் விஷ்ணு அப்துல்வஹாப் எம்எல்ஏ வழங்கினார்.
இன்றைய குழந்தைகள் நாளைய வருங்கால தூண்கள் . அக்கண்மணிகள் தெருவில் சிதறிய நெல்மணிகளாக இல்லாமல் நெற்களஞ்சியத்தில் இருக்க வேண்டிய பொன்மணிகளாக மாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி நலத்திட்டம் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கலெக்டர் விஷ்ணு, அப்துல் வஹாப் எம் எல் ஏ ஆதரவற்ற 13 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மாநகராட்சி மேயர் பி எம் சரவணன் துணைமேயர் கே ஆர் ராஜு ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமர் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவிக்கான பத்திரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
புத்தகப்பை , பிரதமர் மந்திரி பாதுகாப்பு திட்டம் குறித்த கையேடு, 5 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு அட்டை, பிரதம மந்திரி பாதுகாப்பு சான்றிதழ், கல்வி உதவித்தொகை, 10 லட்சத்திற்கான வைப்பு நிதி செலுத்தப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை 13 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது .
நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி பிற்படுத்தப்பட்டோர் இயக்குனர் உஷா தேசிய தளவியல் மேலாளர் தேவராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Image source: dailythanthi.com