செய்திக்குறிப்புகள்:
கொக்கிரக்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.
காலை 9.00 முதல் மாலை 5.00 வரை மின் விநியோகம் ரத்து.
திருநெல்வேலி மாநகரில் உள்ள கொக்கிரக்குளம் துணை மின் நிலையத்தில் வரும் 05/03/2022 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என திருநெல்வேலி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் திரு. முத்துக்குட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள்:
திருநெல்வேலி சந்திப்பு
கொக்கிரகுளம்
மீனாட்சிபுரம்
வடக்கு புறவழிச்சாலை பகுதி
தெற்கு புறவழிச்சாலை பகுதி
வண்ணார்பேட்டை
இளங்கோ நகர்
பரணி நகர்
நெல்லை சந்திப்பு முதல் கதீட்ரல் வரையிலான திருவனந்தபுரம் சாலை
புதுப்பேட்டை தெரு
சுப்பிரமணியபுரம்

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.