Logo of Tirunelveli Today

வீரவநல்லூர் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

August 13, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி சேரன் மகாதேவியின் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது .‌ இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் .

சேரன்மகாதேவி வீரவநல்லூரில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் இறங்கும் பூக்குழி திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் 3-8-2022 அன்று திரௌபதி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா நிகழ்ச்சி தொடங்கியது . சுவாமி அம்பாள் வீதி உலா, அர்ஜுனர் சுவாமி தவக்கோலம் வீதி உலா , சுவாமி அம்பாள் சப்பரம் வீதி உலா, தபசு காட்சிகள் என பலவிதமான சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன .

விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேண்டிக்கொண்டு பூக்குழி இறங்கும் திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது . காலை 9 மணிக்கு பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரவு 7மணிக்கு நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷத்துடன் எலுமிச்சம் பழ மாலை இடுப்பிலும் கழுத்திலும் அணிந்தவாறு பூக்குழியில் இறங்கினர் . தொடர்ந்து சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது .

விழாவில் வீரவநல்லூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணியன், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, திமுக நகர் செயலாளர் சுப்பையா, மற்றும் கவுன்சிலர்கள் அனந்தராமன் , கல்பனா சந்தானம், சிதம்பரம் ,முத்துக்குமார் ,அங்கம்மாள், இசக்கி சரவணன்,ஆறுமுகம் மற்றும் குமரன் பார்வதி நாதன் ,‌ பாஜக சேரன்மாதேவி மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் சிவபாலன் சுரேஷ்குமார் ,சரவணன், சுரேஷ்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify