Logo of Tirunelveli Today

பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

June 9, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி குறிப்புகள் :

  • நெல்லை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ‌ சாலை ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
  • வண்ணாரப்பேட்டையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலையோர ஆக்ரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

நெல்லை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் மற்றும் டிஜிட்டல்பேனர்கள் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் நிலை இருந்து வந்தது. பல உயிர்களும் பலியாகும் நிலையும் இதனால் ஏற்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ‌கூறிவந்தனர் .

இதனை ஏற்று மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி நெல்லை வண்ணார்பேட்டை , மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டார் .

இதையடுத்து மாநகராட்சி உதவி ஆணையாளர் லெனின் , உதவிப் பொறியாளர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் நாராயணன், சுகாதார அலுவலர் இளங்கோ, நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

நேற்று காலையில் நெல்லை வண்ணாரப்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினார்கள். மேலும்
கடைகளில் முன்புள்ள மேற்கூரைகள் விளம்பர பலகைகள் போன்றவற்றையும் கடைகளின் முன்புள்ள கான்கிரீட் ஸ்லாப்புகள் போன்றவற்றையும் அகற்றினர்

சாலையோரம் தள்ளுவண்டிகளில் செயல்பட்ட கடைகளையும் , அங்கிருந்த மேஜை நாற்காலி என வாகனங்களில் ஏற்றியதால் சில வியாபாரிகள் எதிர்ப்பு qதெரிவித்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. எனினும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify