Logo of Tirunelveli Today

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தனியார் வேலை வாய்ப்பு முகாம்

August 4, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லையில் தனியார் வேலை வாய்ப்பு மையம் முகாம் நடக்க இருக்கின்றது.
  • 6-8-2022 சனிக்கிழமை அன்று நடைபெறும் இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன் பெறுவார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது;

நெல்லையில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 6-8-2022 சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கின்றது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் . காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன.

ஐந்தாம் வகுப்பு முதல் எஸ் எல். சி, பிளஸ் 2 ,பட்டப்படிப்பு ,டிப்ளமோ ,ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வி தகுதி உடைய அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் உடைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். சுயதொழில் செய்வதற்கு தேவையான கடன் உதவிகள் அனைத்தும் வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்க இருக்கின்றன.

இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களுடைய கல்விச்சான்று, ஆதார் அட்டை, ஆகியவற்றின் நகலுடன் சுய விவரங்களையும் சேர்த்து கொண்டு வர வேண்டும்.

மேலும் www.tnprivatejobs.tn.gov.in. என்ற இணையதளத்தில், கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். வேலை வாய்ப்பு தொடர்புக்கு , மேலும் தகவல்கள் பெறுவதற்கு NELLAI EMPLOYMENT OFFICE என்ற டெலிகிராம் சேனலில் இணைந்தும் பயனடையவும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Image source: thehindu.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify