Logo of Tirunelveli Today

பிள்ளையாருக்கு பிடித்தமான கனி, மோதக பட்சணங்களின் சிறப்பு

September 3, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

ஓம் எனும் மந்திரத்தின் தலைவனாய் விளங்கும் கணபதி முக்கண் முதல்வனாக முப்பெரும் தலைவனாக விளங்குபவர். எந்த காரியத்தை முதலில் தொடங்கும் போதும் கணபதியை வழிபட்டு தொடங்கினால் அந்த காரியம் ஜெயம் ஆகும். பூர்த்தியாகும் . வெற்றி கிடைக்கும். இலட்சியம் நிறைவேறும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த மானவர் பிள்ளையார். ஏனென்றால் அவருடைய வழிபாட்டில் அதிக பட்சணங்கள் வைத்து நாம் படைக்கின்றோம் . அதில் முக்கியமாக லட்டு, கொழுக்கட்டை, சுண்டல் என்பது அவருக்கு மிகவும் பிடித்தமானவை என்பதால் விநாயகர் சதுர்த்தி அன்று நிச்சயமாக நம்முடைய படைப்பில் அனைத்தும் இடம்பெறும்.

லட்டு ,கொழுக்கட்டை, பழங்கள் என கையில் ஏந்தியவாறு காட்சி தருபவர் விநாயகப் பெருமான் . விநாயகப் பெருமானின் பல்வேறு திருக்கோலங்களை பற்றி பார்க்கும் போது விநாயகமூர்த்தி பட்சணங்கள் கையில் ஏந்தி இருக்கும் சிற்பமே மிகவும் சிறப்பான சிற்பம் கருதப்படுகிறது

'மூஷிக வாகன மோதக ஹஸ்த ஸாமரகர்ண விளம்பர சூத்ர- வாமன ரூப மகேஸ்வர புத்ரா விக்ன விநாயக பாத நமஸ்தே '

எனும் ஸ்லோக பாடலில் மோதகமும் இடம்பெறுகிறது.

கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும் விரும்பும் விநாயகனே வேண்டி... எனும் அடிகளில் சிலப்பதிகார அரும்பத உரையில் மிகவும் அழகாக விநாயகப் பெருமானின் பாடலை இயம்புகின்றது.
விநாயகர் கரும்பு இளநீர் மற்றும் கனிகளை விரும்புவார் என்று அதில் குறிப்பிடப்படுகிறது.

'பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாளும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா '

எனும் ஔவையார் எழுதிய தித்திக்கும் பாடலில் பாலும் தேனும் பாகு பருப்பும் என விநாயகப் பெருமானுக்கு வைக்கப்படும் பட்சணங்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைத்தல நிறைக்கனி அப்பமொடு அவல்பொரி கப்பிய கரிமுக னடிப்பேணி- கற்றிடும் மடியவர் புத்தியில் உறைபவ கற்பகமென வினை கடிதேகும் , மத்தமும் மதியமும் வைத்திடு மறன்மகள் மற்பொரு திறள் புய மதயானை .... எனும் பாடலிலும் கைகளில் கனிகளும் அப்பமும் அவல் பொறிகளும் விநாயகர் பெருமான் வைத்திருப்பார் எனும் அழகிய பொருள் தனை விளக்குகிறது.

இதன்படி விநாயகர் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான பட்சணங்கள் வைத்து படைத்து அவருடைய அருளைப் பெற்று வாழ்க்கையில் வளம் காண்போம்.

Image source: dinakaran.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify