Logo of Tirunelveli Today

விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக தத்துவத்தின் சிறப்பு

September 6, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

ஏராளமான விநாயகர் சிலைகள் கடற்கரையில் கரைக்கும் அழகுதனை பார்ப்பதற்கு எவ்வளவு மக்கள் கூட்டம்! வண்ணமயமான பெரிய பெரிய விநாயகர் சிலைகள் தத்ரூபமாக, ( வடிவமைத்தவருக்கு நிச்சயம் நன்றி சொல்லும் வண்ணம் )அமர்ந்த கோலம் நின்ற கோலம், எழுகின்ற கோலம், நம் மனதையும் சேர்த்து எழ வைக்கின்ற கோலம் என பல்வேறு வடிவ கோலங்களில் எம்பெருமானே , ! விநாயகா! கடல் ஆற்றிலே நீ கரைவதற்கு முன்பாக என் கண்களின் பார்வையிலே கரைந்து விட்டாய் அப்பனே! என பக்தி பரவசத்தோடு மக்கள் கூட்டம்.அலைமோதுகிறது.

வருடம் முழுவதும் நாம் பெருமானை தேடி கோவிலுக்கு செல்கின்றோம். ஆனால் விநாயகப்பெருமானே வருடத்திற்கு ஒருமுறை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று நம் இல்லம் தேடி வருகின்றார் .

எப்படிப்பட்டகோலத்திலே வருகின்றார்! ஆடம்பரம் எதுவுமின்றி எளிமையான கோலத்திலே களிமண் என சொல்லக்கூடிய மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் பெருமானாக இல்லத்துக்குள் நுழைகின்றார்.

'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா'

என ஔவையார் செப்பிய இனிது தமிழ் மொழியை இசைத்தபடி பிள்ளையார் சதுர்த்தி இனிதாய் படைத்து நிறைவு கண்டோம்.

விநாயகர் சதுர்த்தி என்றால் நம் நினைவகம் நிறைவது அவருக்கு பிடித்தமான அவல்பொரி, பழம், பட்சணங்கள் அடுத்து களிமண் பிள்ளையார்.

களிமண் பிள்ளையார் வழிபாட்டில் நமக்கு ஒரு அருமையான தத்துவத்தையும் மிக அழகாக கூறுகின்றார்

'மனிதபிறவியில் பிறந்த நாம் என்றாவது ஒரு நாள் முடிவு மண்ணிலே -என்பதை உணர்ந்து அகங்காரம், ஆணவம் அனைத்தையும் விடுத்து நல்லொழுக்கம் பக்தியோடு வாழ்ந்து முடிவில் என்னோடு ஐக்கியமாகுங்கள் 'என்று மிக அழகாக உணர்த்தவே களிமண் கோலத்தில் காட்சி தருகின்றார் விநாயகப் பெருமான் .

மண்ணிலே மறையப்படும் உடல் தனை விடுத்து , நம்முடைய ஜீவ ஆத்மாவை விநாயகர் பெருமானிடம் வைத்து ஆன்மீக பெரும் கடலில் கரையக்கூடிய விநாயகர் பெருமானோடு சேர்ந்து நாமும் ஐக்கியமாகி , வாழ்க்கையில் பெரும் பாக்கியத்தை அடைவோம் என்பதை நினைவு கூறும் நாளே விநாயகர் சதுர்த்தி அன்று ஆற்றில் விநாயக பெருமான் கரைந்துருகும் நாளாகும்.

மனம் இனிக்க , மங்கல நிகழ்ச்சிகள் அனைத்தும் வீட்டினிலே இனிதேற , மாவிலை தோரணங்கள் மலர்களோடு சேர்ந்து இசைந்தாட, நாதஸ்வர இசையோ கானமழை பொழிந்தாட, ஒவ்வொரு இல்லமும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து மனிதப் பிறவியின் வாழ்வுதனில் நிறைவு காணுங்கள் .

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify