கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தென்தாமரைகுளம், புத்தளம், அஞ்சுகிராமம், கொட்டாரம் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அழகப்பப்புரம், மருங்கூர், மயிலாடி, சுசீந்திரம், தேரூர் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியிலும், தாழக்குடி, அழகியபாண்டியபுரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியிலும், கணபதிபுரம். வெள்ளிமலை, மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, ரீத்தாபுரம் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியிலும், திங்கள்நகர், நெய்யூர், இரணியல், கல்லுக்கூட்டம், வில்லுக்குறி, கப்பியறை ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு நெய்யூர் எல்.எம்.எஸ். மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், முளகுமூடு, வாழ்வச்சகோஷ்டம், திருவிதாங்கோடு, குமாரபுரம், கோதநல்லூர், விலவூர், வேர்க்கிளம்பி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு முளகுமூடு புனித ஜான் பால் கல்வியியல் கல்லூரியிலும், ஆற்றூர், பொன்மனை, திற்பரப்பு, குலசேகரம், திருவட்டார், கடையால், அருமனை ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. கல்லூரியிலும், கருங்கல், பாலப்பள்ளம், புத்தளம், கிள்ளியூர், கீழ்குளம் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு தொலையாவட்டம் புனித ஜூட் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பளுகல், இடைக்கோடு, பாகோடு, உண்ணாமலைக்கடை, நல்லூர், களியக்காவிளை ஆகிய 6 பேரூராட்சிகள் மற்றும் குழித்துறை நகராட்சிக்கு மார்த்தாண்டம் நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்ற பயிற்சி முகாம்களில் சிலவற்றை நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.அரவிந்த் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.