Logo of Tirunelveli Today

தேர்தல் அலுவலர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி முகாம்!

February 11, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தென்தாமரைகுளம், புத்தளம், அஞ்சுகிராமம், கொட்டாரம் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அழகப்பப்புரம், மருங்கூர், மயிலாடி, சுசீந்திரம், தேரூர் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியிலும், தாழக்குடி, அழகியபாண்டியபுரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியிலும், கணபதிபுரம். வெள்ளிமலை, மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, ரீத்தாபுரம் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியிலும், திங்கள்நகர், நெய்யூர், இரணியல், கல்லுக்கூட்டம், வில்லுக்குறி, கப்பியறை ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு நெய்யூர் எல்.எம்.எஸ். மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், முளகுமூடு, வாழ்வச்சகோஷ்டம், திருவிதாங்கோடு, குமாரபுரம், கோதநல்லூர், விலவூர், வேர்க்கிளம்பி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு முளகுமூடு புனித ஜான் பால் கல்வியியல் கல்லூரியிலும், ஆற்றூர், பொன்மனை, திற்பரப்பு, குலசேகரம், திருவட்டார், கடையால், அருமனை ஆகிய 7 பேரூராட்சிகளுக்கு ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. கல்லூரியிலும், கருங்கல், பாலப்பள்ளம், புத்தளம், கிள்ளியூர், கீழ்குளம் ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு தொலையாவட்டம் புனித ஜூட் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பளுகல், இடைக்கோடு, பாகோடு, உண்ணாமலைக்கடை, நல்லூர், களியக்காவிளை ஆகிய 6 பேரூராட்சிகள் மற்றும் குழித்துறை நகராட்சிக்கு மார்த்தாண்டம் நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்ற பயிற்சி முகாம்களில் சிலவற்றை நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.அரவிந்த் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify