Logo of Tirunelveli Today

பள்ளி செல்ல கூடுதலாக பஸ்கள் இயக்க கோரி மாணவிகள் மனு

August 23, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை பள்ளி செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவிகள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
  • தரக்குறைவாக நடத்தும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளிக்கூடம் செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தரக்குறைவாக நடத்தும் கண்டக்டர்களுக்கு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பாளையங்கோட்டையில் அதிகமான பள்ளிகளும் கல்லூரிகளும் செயல்படுகின்றன. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற சிறப்புமிக்க இங்கு பள்ளிகளில் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நிறைய மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

தினம்தோறும் பள்ளிகளில் ஏராளமான மாணவிகள் பஸ்களில் வந்து படிக்கின்றனர். அவர்களுடைய சீருடை பார்த்து அரசு பஸ்ஸில் இலவசமாக பயணிப்பதற்கு இவர்களுக்கு அனுமதி உண்டு.

பாளையங்கோட்டை அருகே நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடன் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணுவை சந்தித்து பள்ளிக்கூடத்திற்கு சென்று வருவதற்கான கூடுதல் பஸ்களை இயக்குமாறு கோரிக்கை மனுவை அளித்தனர் .

அப்பொழுது மாணவிகள் கூறியதாவது;

பாளையங்கோட்டையில் செயல்படும் பள்ளிகளில் நொச்சிக்குளம், கிருஷ்ணாபுரம், சமத்துவபுரம், ஆரோக்கியநாதபுரம் , வி. எம் . சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான நிறைய மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்று படித்து வருகிறோம்.

நெல்லை சந்திப்பு வரை இயக்கப்படும் அரசு பஸ்களில் பள்ளிக்குச் சென்று வருகிறோம் ‌. முன்பு காலை 9 மணிக்குள் மூன்று பஸ்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது ஒரு பஸ் மட்டுமே வருகின்றது. இதனால் எங்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது . பள்ளிக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவிகளான எங்களை மரியாதை குறைவாக நடத்துவது மிகவும் கஷ்டமாக உள்ளது. பஸ் படிக்கட்டுகளில் இந்த பிரச்சினைகளால் ஆபத்தான முறையில் தொங்கி செல்லும் நிலையும் ஏற்படுகிறது.

மாவட்ட ஆட்சியாளர் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம் போல் மூன்று பஸ்கள் இயக்குவதற்கான வசதி செய்து தர வேண்டும். தரக்குறைவாக பேசும் கண்டக்டர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify