Logo of Tirunelveli Today

அடிப்படை வசதிகள் செய்யக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

September 14, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி மக்கள் மனு அளித்தனர்.
  • செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்என்று மேயர் பி எம் சரவணன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரவேண்டும் எனக் கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேயர் பி. எம் சரவணனிடம் மக்கள் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மேயர் பிஎம் சரவணன் இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். துணை மேயர் கே .ஆர். ராஜு அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது . 22வது வார்டு சுதந்திர விநாயகர் கோவில் கீழத் தெரு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க கோரி மக்கள் மனு அளித்தனர்.

55வது வார்டில் மழைநீர் வடிகால் தூர்வாருதல் , கான்கிரீட் சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மனு அளித்தனர். 18வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டது .பத்துப்பாட்டு, திருநீலகண்ட நாயனார் தெரு , வண்ணாரப்பேட்டை தெருக்களில் கழிவு நீரோடையை சீரமைத்து தர வேண்டும் மற்றும் மேலநத்தம் பகுதியில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து தரக் கோரியும் மனு அளிக்கப்பட்டது. பேட்டை, சத்யா நகர் மற்றும் வ உ சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று மனு அளித்தனர். எஸ் டி பி ஐ கட்சியினர் மேலப்பாளையம் பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும், மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று மனு அளித்தனர்.

கோரிக்கை மனு அளித்த அனைவருக்கும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று மேயர் பி .எம் சரவணன் தெரிவித்தார் . தச்சநல்லூர் மண்டல தலைவர் செயற்பொறியாளர்கள் வாசுதேவன் மாமன்ற உறுப்பினர்கள் ஜெகநாதன் மண்டல உதவி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா மற்றும் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify