Logo of Tirunelveli Today

மனம் மகிழ்ச்சிக்கு சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

August 23, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

பெருமாளுக்கு மிகவும் உகந்த தினம் சனிக்கிழமை. சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பெருமாள் வழி கொடுப்பார். முக்கியமாக சனி பகவானின் சங்கடத்திலிருந்து பெருமாள் நம்மை காப்பாற்றுவார் என்பது ஐதீகம்.

சனிக்கிழமை அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நீராடி நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமோ நாராயணாய நமஹ எனும் திரு மந்திரத்தை ஓதுதல் சிறப்பு

அன்று முழுவதும் சாத்வீகமான எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் .பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல் சிறப்பு. பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை பெருமாளுக்கு அணிவித்தால் பெருமாளின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும்..

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுக்ரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, தாயாரின் சிபாரிசு கிடைத்ததால் 'நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள். அதனால் முதலில் தாயரைப் பார்த்து வணங்கி விட்டு அடுத்த பெருமாளை தரிசிப்பது சிறப்பு.

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை.

சனிக்கிழமை தோறும் பெருமாளின் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது வீட்டில் ஸ்லோகங்கள் படிப்பது நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். குழப்பமான மனம் தெளிவாகும். செல்வ செழிப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறக்கும் . பெருமாளின் அனுகிரகம் பெற்று வாழ்க்கையில் நிறைவான பயன் காணுங்கள்.

Image source: dinakaran.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify