Logo of Tirunelveli Today

அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் மக்கள் குறைதீர் கூட்டம்

September 10, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
  • மக்கள் பொதுவிநியோகத் திட்டசேவை குறைபாடுகள் போன்ற அனைத்தும் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் சனிக்கிழமை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. பொது விநியோக திட்ட சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு இந்தத் திட்டம் செயல்படுகிறது .

அதன்படி இன்று நடைபெறும் குறைதீர் கூட்ட முகாமில் உங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம்,புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல் மற்றும் முகவரி மாற்றம், குடும்ப அட்டையில் கைபேசி எண் மாற்றம் செய்தல், அத்தியாவசியப் பொருள்களின் தரம் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள் மற்றும் சேவை குறைபாடுகள் போன்ற அனைத்தும் குறித்து மக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இதற்காக விண்ணப்பிக்க செல்லும் பயனர்கள் அதற்குரிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும் .ஆதார் அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், நீங்கள் குடியிருக்கும் முகவரி அதற்கான ஆதார ஆவணங்கள் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி எண் மாற்றம் இருந்தால் கைப்பேசியும் எடுத்துச் செல்லவும். பொதுவிநியோக கட்டுப்பாட்டு அறை எண் 9342471314 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify