செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெற இருக்கிறது.
- சென்னை ஓய்வூதிய இயக்குனர் இந்த கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கேட்க இருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் ஓய்வூதிய குறைதீர் கூட்டம் 25-8-2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது . இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்கள் தலைமை வகிக்க இருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது ;
திருநெல்வேலி மாவட்டம் ஓய்வூதிய குறைதீர் கூட்டம் 25-8-2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சென்னை ஓய்வூதிய இயக்குனர் இந்த கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கேட்கவும் இருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதிய பலன்கள் கிடைக்கப் பெறாமல் இருந்தால் இதில் விண்ணப்பிக்கலாம் .
அவர்கள் தங்களுடைய முழு முகவரியுடன் தொடர்பான புகார்களை எழுதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 -8-2022 தேதிக்குள் அனுப்பி வைக்கவும். விண்ணப்ப மனுவுடன்சேர்த்து , பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகத்தின் பெயர் மற்றும் காரணத்திற்கான கோரிக்கை , தற்போது வேலை செய்யும் அலுவலகத்தின் மின் அஞ்சல் முகவரி, ஆணை நகல் ஓய்வூதிய எண் ஆகியவற்றையும் மனுவுடன் சேர்த்து இணைத்து அனுப்பவும்.
குறிப்பிட்டு தேதிக்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த சம்பந்தப்பட்ட துறையின் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கொண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அவை அனைத்தும் 25-8-2022 ஆம் தேதி நடைபெற இருக்கும் குறைதீர் கூட்டத்தின் போது சம்பந்தப்பட்ட அலுவலர்களால் மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் மறுக்கப்படும். ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும் . என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.