Logo of Tirunelveli Today

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

August 10, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெற இருக்கிறது.
  • சென்னை ஓய்வூதிய இயக்குனர் இந்த கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கேட்க இருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் ஓய்வூதிய குறைதீர் கூட்டம் 25-8-2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது . இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்கள் தலைமை வகிக்க இருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது ;

திருநெல்வேலி மாவட்டம் ஓய்வூதிய குறைதீர் கூட்டம் 25-8-2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சென்னை ஓய்வூதிய இயக்குனர் இந்த கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கேட்கவும் இருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதிய பலன்கள் கிடைக்கப் பெறாமல் இருந்தால் இதில் விண்ணப்பிக்கலாம் .

அவர்கள் தங்களுடைய முழு முகவரியுடன் தொடர்பான புகார்களை எழுதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12 -8-2022 தேதிக்குள் அனுப்பி வைக்கவும். விண்ணப்ப மனுவுடன்சேர்த்து , பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகத்தின் பெயர் மற்றும் காரணத்திற்கான கோரிக்கை , தற்போது வேலை செய்யும் அலுவலகத்தின் மின் அஞ்சல் முகவரி, ஆணை நகல் ஓய்வூதிய எண் ஆகியவற்றையும் மனுவுடன் சேர்த்து இணைத்து அனுப்பவும்.

குறிப்பிட்டு தேதிக்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த சம்பந்தப்பட்ட துறையின் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான காரணங்கள் கொண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அவை அனைத்தும் 25-8-2022 ஆம் தேதி நடைபெற இருக்கும் குறைதீர் கூட்டத்தின் போது சம்பந்தப்பட்ட அலுவலர்களால் மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் மறுக்கப்படும். ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும் .‌ என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify