கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல வழித்தடங்களில் ரயில்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லை வழியாக தினமும் சென்னை சென்று வரும் செந்தூர் விரைவு ரயிலும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் ரயில்கள் எதுவும் செல்லாத நிலையில், இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக திருநெல்வேலி முதல் ஸ்ரீவைகுண்டம் வரை உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் இன்று திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதையில் உள்ள குறிச்சி ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை குறிச்சி ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் கொக்கிரகுளம் - குறிச்சி சாலை வழியாக வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் இன்று ஒரு நாள் மாற்றுப்பாதையில் பயணம் செய்யும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.