Logo of Tirunelveli Today

பாபநாசத்தில் கல்யாண தீர்த்த கோடி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

June 24, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலையில் கல்யாண தீர்த்தம் கோடி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேற்குதொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவிக்கு மேல் இருக்கும் கல்யாண தீர்த்தத்தில் லோக நாயகி சமேத கோடி லிங்கேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது . நினைத்த காரியங்கள் நிறைவேற அருள் புரியும் அகஸ்தியர் அவரது மனைவி லோப முத்திரையுடன் ரதத்தில் நின்ற நிலையில் சிலை அமைக்கப்பட்டு இருந்தது .

அந்த இடத்தில்தான் அகஸ்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் பிரத்யேகமாய் காட்சியளித்தார்.
இந்நிலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அகஸ்தியர் மற்றும் லோபமுத்ரா சிலைகள் அடித்து செல்லப்பட்டு கோவில் சேதமானது.

புதிதாக அகஸ்தியர் சிலையை நிறுவ பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விரைவில் சிலைகள் நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

பல லட்சம் செலவில் அறநிலை துறை அனுமதியுடன் , அமெரிக்காவில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த ஒருவர் தனது சொந்த முயற்சி வெற்றியாகி கோவில் முற்றிலும் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றது .

நேற்று முன்தினம் காலையில் விக்னேஸ்வர பூஜை ,மகா கணபதி ஹோமம் ,பிரம்மச்சாரி பூஜை ,நவக்கிரக ஹோமம், தன பூஜை ,கோ பூஜை, சுமங்கலி பூஜை ,கன்யா பூஜை பூர்ணாகுதி தீபாராதனை அனைத்தும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மாலையில் விசேஷ சந்தி , கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.

நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை , பிம்ப சுத்தி , நாடி சந்தானம், கடம் புறப்பாடு நடைபெற்று , தொடர்ந்து மூலஸ்தானம் லோக நாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் அகஸ்தியர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் அறநிலையத் துறை துணை ஆணையர் ஜான்சிராணி, உதவி ஆணையர் கவிதா, சரசு ஆய்வர் கோமதி, செயல் அலுவலர் போத்தி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் அம்பை ஒன்றிய தலைவர் பரணி சேகர், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

கும்பாபிஷேகத்தின்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது பக்தர்கள் கரகோஷம் எழுப்பினர்.

விழாவையொட்டி அம்மன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகுரு மாதாந்திர பௌர்ணமி, அமாவாசை குழுவினர் சார்பில் சிறப்பு அன்னதானம் நடைபெற, அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா சார்பில் பக்தர்களை பிரசாதம் வழங்கப்பட கும்பாபிஷேகம் நிகழ்வு இனிதே நடைபெற்றது.

Image source: Dailythanthi.com

செய்தி ஆசிரியர்

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify