Logo of Tirunelveli Today

பாளையங்கோட்டையில் பங்குனி திருவிழா இன்று துவக்கம்!

March 10, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • ராஜகோபாலசுவாமி கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
  • புதிதாக செய்யப்பட்ட தேரில் ராஜகோபாலன் உலா வர இருக்கிறார்.

பாளையங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அழகியமன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவிலின் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது. இந்த விழாவில் பத்தாம் நாளான 19/03/2022 அன்று புதிதாக தயார் செய்யப்பட்டு வெள்ளோட்டம் கண்ட தேரில், இராஜகோபாலன் ரத வீதிகளில் உலா வர உள்ளார்.

பங்குனி திருவிழா நிகழ்ச்சிகள்:
10/03/2022 முதலாம் நாள்:
காலை: கொடியேற்றம்.
இரவு: இரட்டை தோளுக்கினியான்களில் இராஜகோபாலன், அழகியமன்னார் வீதி உலா.

11/03/2022 இரண்டாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: சிம்ம வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.

12/03/2022 மூன்றாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: அனுமந்த வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.

13/03/2022 நான்காம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: ஆதிசேஷன் வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.

14/03/2022 ஐந்தாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: இரட்டை கருடசேவை. இராஜகோபாலன், அழகியமன்னார் தனித்தனி கருட வாகனங்களில் வீதி உலா.

15/03/2022 ஆறாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: யானை வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.

16/03/2022 ஏழாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
மாலை: சூர்ணோத்ஸவம் முடிந்து இந்திர விமானத்தில் இராஜகோபாலன்
வீதி உலா.
இரவு: புன்னைமர வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.

17/03/2022 எட்டாம் திருநாள்:
காலை: பல்லக்கில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: குதிரை வாகனத்தில் இராஜகோபாலன் வீதி உலா.

18/03/2022 ஒன்பதாம் திருநாள்:
காலை: சூரியபிரபையில் இராஜகோபாலன் வீதி உலா.
இரவு: சந்திரபிரபையில் இராஜகோபாலன் வீதி உலா.
19/03/2022 பத்தாம் திருநாள்:
காலை: தேரோட்டம்.
இரவு: பல்லக்கில் தவழ்ந்த கண்ணன் திருக்கோலத்தில் வீதி உலா.

20/03/2022 பதினோறாம் திருநாள்:
காலை: தாமிரபரணியில் தீர்த்தவாரி.
இரவு: சப்தாவர்ண புறப்பாடு.

Image source: anudhinam.org

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify