Logo of Tirunelveli Today

பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தேசிய புத்தக கண்காட்சி

June 15, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம் :

  • நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு அருங்காட்சியகத்தில் தேசிய புத்தக கண்காட்சி விழா நடைபெறவிருக்கிறது.
  • காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இம்மாதம் 18ஆம் தேதி கண்காட்சி தொடக்கம் என்று அறிவிப்பு.

நம்முடைய வாழ்வில் படிப்படியாக முன்னேறுவதற்கு புத்தகம் ஒரு பாலமாய் அமைகிறது. நம் லட்சியம் வெற்றி பெற அதற்கு ஏற்றவாறு பலருடைய புத்தகம் கருத்துக்கள் அனைத்தும் திரட்டவும், அதற்கான குறிப்புகள் எடுத்து வைக்கவும், அதில் பல கேள்விகள் எழுப்பி, விடை காண்பதற்கும் புத்தக கண்காட்சி நமக்கு உறுதுணையாக அமையும். அதை பறைசாற்றும் வகையில்

பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இம்மாதம் 18ஆம் தேதி முதல் தேசிய புத்தக கண்காட்சி நடைபெறுகிறது

இதுகுறித்து காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாவது.‌..

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அரசு அருங்காட்சியகம் ஆகியவை சேர்ந்து 35-வது தேசிய புத்தக கண்காட்சி விழா நடத்த இருக்கிறது. அருங்காட்சியக வளாகத்தில் நடக்கும் இந்த கண்காட்சி இம்மாதம் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தினமும் காலை 10மணி முதல் இரவு 7 மணி வரை
நடக்கும்.

இதுதவிர இம்மாதம் 18ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தினமும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உற்சாக போட்டிகளும் கவியரங்கம் , கருத்தரங்கும் நடைபெறும் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் ..

சிறப்பு தள்ளுபடியாக 10 முதல் 15 சதவீதம் வரை பள்ளி கல்லூரி நூலகங்களுக்கு வாங்கும் நூல்களுக்கு வழங்கப்பட உள்ளது

மேலும்விபரங்களுக்கு 75 0 2 433751 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று அறிவிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது

சமையலில் தோசையோடு சுவை தரும் சட்னி இட்டு பரிமாறிய அந்தக் கால புத்தகங்கள் மட்டுமில்லாது… அதே தோசையில் பீட்சா , பனீர், காளான், சீஸ், சாஸ் என கலந்து விதவிதமாய் பரிமாறுவது போல இந்த கால தேவையான புத்தகங்களும் ஒருசேர பார்க்கக்கூடிய புத்தக கண்காட்சியை அனைவரும் சென்று பார்த்து பயன் பெறுவோம்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify