திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பாளையங்கோட்டை சட்டம் - ஒழுங்கு உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த திரு. ஜான் பிரிட்டோ அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு.நாகசங்கர் அவர்கள், பாளையங்கோட்டை சட்டம் - ஒழுங்கு புதிய உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. திரிபாதி அவர்கள் பிறப்பித்துள்ளார்.
இதன் அடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட்ட திரு.நாகசங்கர் அவர்கள் விரைவில் பாளைங்கோட்டையின் புதிய சட்டம் - ஒழுங்கு உதவி ஆணையாளராக பதவி ஏற்றுக்கொள்வார் என தெரிய வருகிறது.