தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் மாநிலம் முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியாக சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பியதால், சிறப்பு சிகிச்சை மையம் காலியாக காணப்பட்டது.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டத்தில் நோய்த்தொற்றும் குறைந்து விட்டதால், வழக்கமான சித்த மருத்துவ சிகிச்சைகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, படுக்கைகள் சுத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கியது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்ல துவங்கியுள்ளனர். மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் கபாசுரக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.