Logo of Tirunelveli Today

பாளையங்கோட்டை மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது..!

May 10, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கொரோனா இரண்டாம் அலை தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில், திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகப் பாளையங்கோட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் பத்தாயிரம் நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா நோய்க்கான மருந்துகள் எதுவும் சரிவர கண்டுபிடிக்கப்படாத நிலையில், கபசுரக் குடிநீர் உட்கொள்வதால் நோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மாநகரில் உள்ள பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிமூலம் தினமும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் தன்னார்வலர்களுடன் இணைந்து நேற்று பத்தாயிரம் நபர்களுக்கு கபசுரக் குடிநீர் காய்ச்சி வழங்கும் நிகழ்ச்சி  திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பெயரில் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify