திருநெல்வேலியில் காவலர்களுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சி முகாம் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்து கொண்ட காவலர்களுக்கு உடம்பிற்கு வலு சேர்க்கும் உளுந்தங்கஞ்சி வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாநகர துணை ஆணையாளர் ராஜராஜன், ஆயுதப்படை துணை ஆணையாளர் முத்தரசு மற்றும் காவலர்கள் என ஏராளமானோர் பங்குபெற்றனர்.