Logo of Tirunelveli Today

பால் உற்பத்தியை அதிகரிக்கும் தனுவாஸ் ஊட்டச்சத்து அறிமுக விழா

June 15, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம் :

  • நெல்லை களக்குடியில் தனுவாஸ் ஊட்டச்சத்து அறிமுக விழா
  • தனுவாஸ் ஊட்டச்சத்து தொழில்நுட்பங்களை பால்பண்ணை யாளர்களிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமாய் வாழ்வதற்கு தினமும் 100 மில்லி பால் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஆய்வு கூறுகின்றது ‌. பால் உற்பத்தியை பெருக்குவதற்கு அரசு பலவிதமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் நடவடிக்கையாக.‌‌.

நெல்லை மாவட்டம் கலக்குடியில் செவ்வாய்க்கிழமை அன்று கறவை மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் தனுவாஸ் ஊட்டச்சத்து தொழில்நுட்பங்களை பால்பண்ணை யாளர்களிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிநடைபெற்றது .

சிற்றாறு நிலப் பகுதியைச் சேர்ந்த 86 கால்நடை விவசாயிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் , மாவட்டத் துணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கால்நடை ஊட்டச்சத்து துறை உதவி பேராசிரியர் அருள்நாதன் வரவேற்றார். மாநிலத் துணைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து குறித்து விளக்கி பேசினார்.

கால்நடை ஊட்டச்சத்துயியல் துறை செல்லபாண்டியன் கால்நடை வளர்ப்போருக்கு கிடைக்கும் சேவை பற்றி விரிவுரையாற்ற…கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் கு .கலையரசி கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்

தமிழ்நாடு நீர்வள இரண்டாம் பகுதியின் சிற்றாறு உப வடிநிலப்பகுதி திட்ட பயனாளிகளுக்கான ' கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் மீத்தேன் உற்பத்தியை குறைக்கும் தனுவாஸ் ஊட்டச்சத்து தொழில்நுட்பங்களை பண்ணையாளர்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக இவ்விழா நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் வி.பி பொன்னுவேல் திட்டத்தில் மடிப்பிதழ்களை வழங்கினார். கல்லூரி முதல்வர் அ.பழனிசாமி பயனாளிகளுக்கு இடு பொருட்களை வழங்கி தலைமை உரையாற்றினார்‌.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify