செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் கீழக்கடையம் ரயில்நிலையத்தில் பாரதியின் படங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டது.
- ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கப்பட்ட இந்த விழாவில் ரயில் நிலைய கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்றுபாரதியின் படங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய போராட்ட வீரரும், கவிஞருமான மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் தென்காசி மாவட்டத்தில் கீழ கடையத்தில் பிறந்தார்.
பாரதியார் தம்முடைய மனைவி செல்லம்மாள் உடன் இரண்டு ஆண்டுகள் கீழ கடையத்தில் வாழ்க்கையை கழித்துள்ளார். இதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் சென்னை கடையம் அரசு நூலகம் வளாகத்தை சுமார் 3 கோடி மதிப்பில் சென்னை சேவாலயா நிறுவனத்தினர் புதுப்பித்து உள்ளனர்.
மேலும் அவர்கள் பாரதியார் கற்றல் மையம் மற்றும் பாரதியார் செல்லம்மாள் அவர்களுடைய முழு உருவச் சிலையும் அமைத்துள்ளனர். கீழகடையம் ரயில்நிலையத்தில் பாரதி செல்லம்மாள் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் காட்டும் வகையில் படங்கள் வரைய, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாரதியின் ஓவியங்களை வரையும் பணியை தொடங்கப்பட்டது. ரயில் நிலைய கண்காணிப்பாளர் பி. பிரின்ஸ் வினோத் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஓவியர் மாரி ஆனந்த் செல்லம்மாள் பாரதி உருவப்படங்களை ரயில் நிலைய சுவர்களில் வரைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சேவாலயா நிறுவனர், கடையம் திருவள்ளுவர் கழகத்தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.