Logo of Tirunelveli Today

தென்காசியில் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் பாரதியார் படங்கள் வரையும் பணி தொடக்கம்

September 12, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் கீழக்கடையம் ரயில்நிலையத்தில் பாரதியின் படங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டது.
  • ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கப்பட்ட இந்த விழாவில் ரயில் நிலைய கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்றுபாரதியின் படங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய போராட்ட வீரரும், கவிஞருமான மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் தென்காசி மாவட்டத்தில் கீழ கடையத்தில் பிறந்தார்.

பாரதியார் தம்முடைய மனைவி செல்லம்மாள் உடன் இரண்டு ஆண்டுகள் கீழ கடையத்தில் வாழ்க்கையை கழித்துள்ளார். இதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் சென்னை கடையம் அரசு நூலகம் வளாகத்தை சுமார் 3 கோடி மதிப்பில் சென்னை சேவாலயா நிறுவனத்தினர் புதுப்பித்து உள்ளனர்.

மேலும் அவர்கள் பாரதியார் கற்றல் மையம் மற்றும் பாரதியார் செல்லம்மாள் அவர்களுடைய முழு உருவச் சிலையும் அமைத்துள்ளனர். கீழகடையம் ரயில்நிலையத்தில் பாரதி செல்லம்மாள் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் காட்டும் வகையில் படங்கள் வரைய, ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

ரயில்வே நிர்வாகம் அனுமதி கொடுத்ததை தொடர்ந்து பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாரதியின் ஓவியங்களை வரையும் பணியை தொடங்கப்பட்டது. ரயில் நிலைய கண்காணிப்பாளர் பி. பிரின்ஸ் வினோத் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஓவியர் மாரி ஆனந்த் செல்லம்மாள் பாரதி உருவப்படங்களை ரயில் நிலைய சுவர்களில் வரைந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சேவாலயா நிறுவனர், கடையம் திருவள்ளுவர் கழகத்தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify