Logo of Tirunelveli Today

ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி! நெல்லை மாநகரில் இன்று அனுமதிக்கப்பட்ட கடைகள் திறப்பு!

June 7, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவியதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தென்மாவட்டங்களில் ஓரளவு நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு அந்த மாவட்டங்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகளை விதித்துள்ளது. இன்று முதல் இந்த தளர்வு நடவடிக்கைகள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், திருநெல்வேலி மாநகரில் உள்ள  அரசு அனுமதிக்கப்பட்ட கடைகள் இன்று திறக்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாநகரில், அரசாங்கம் அனுமதி அளித்துள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், மின்பொருட்களை விற்பனை செய்யும் எலக்ட்ரிக்கல் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஆட்டோமொபைல்ஸ் கடைகள், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுத்து உபகரணங்கள் விற்பனை செய்யும் ஸ்டேஷனரி கடைகள் காலை மணி முதல் மாலை மணி வரை திறக்கப்படும். மேலும் வாடகை வாகனங்களான கால் டாக்ஸி, ஆட்டோக்களில் பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று பயணம் செய்துகொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த தளர்வுகளை அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify