Logo of Tirunelveli Today

ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை.

May 17, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மாநிலம் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை காவல்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறிச் சாலைகளில் பயணம் செய்பவர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன தண்டனைகளை வழங்கி வருகிறார்கள். 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கு தினமான நேற்று, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை நகர் பகுதிகளில் நேற்று காரணமே இல்லாமல் விதிமுறைகளை மீறி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்களை நடமாடும் மருத்துவக் குழுவினர் மூலம் தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை செய்தவர்களின் முகவரி, செல்போன் எண் ஆகியவையும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்குக் கொரோனா நோய்பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்பட்டது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify