Logo of Tirunelveli Today

ஆசிரியர் மாணவர்களின் வருகை இணைய வழி பதிவு அமுலாக்கம்

August 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி மாவட்டம் ஆசிரியர் மாணவர்கள் வருகை இணைய வழியில் பதிவு செய்யும் திட்டம் அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்டது.
  • திங்கள்கிழமை முதல் தங்கள் வருகையை ஆசிரியர்கள் இணைய வழியில் பதிவு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் திங்கட்கிழமை முதல் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர்களின் வருகை இணைய வழி பதிவு செய்யும் திட்டம் அமிலுக்கு வந்தது.

டி என் ஸ்கூல்ஸ் கைப்பேசி செயலி என்ற என்ற இணைய வழியின் பதிவாக்கம், பள்ளிக்கல்வித்துறை மூலமாக சென்ற 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா காரணமாக இணைய வழியில் பதிவு செய்யும் திட்டம் முழுமையாக செயல்படாமல் இருந்து வந்தது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் சரியான நேரத்தில் வருவதை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த இணைய வழி பதிவு செய்யும் திட்டம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை முதல் இணைய வழியில் பதிவு செய்யும் முறை அமுலாக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த செயலியில் வருகை, வருகையின்மை, விடுமுறை காரணம் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் வகையில் உள்ளது. இதன் மூலம் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர் , மாணவர்கள் வருகை பற்றிய தகவல்கள், , பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் செயல் ஆக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தங்களுடைய வருகையை இணையதளத்தில் பதிவு செய்தனர்.

Image source: tamil.news18.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify