செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிய தாலுகா அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
- தாலுகா திறப்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்று தலைமை தாங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் புதிய தாலுகா அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
திசையன்விளை கால்நடை மருத்துவமனை அருகில் புதிய தாலுகா அலுவலகம் ரூ 3 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வந்தது. அதற்கான பணி முடிவடைந்த நிலையில் கட்டட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் புதிய தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு குத்து விளக்கு ஏற்றி வாழ்த்துரை பேசினார் .
அப்போது சபாநாயகர் அப்பாவு கூறியதாவது;
ஆங்கில வழி பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டு செயல்பட்டு வருகிறோம். ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஸ்மார்ட் வகுப்புகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு எனது சொந்த நிதியில் இருந்து ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டிதரப்படும். அதேபோல அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, கூடங்குளம் அனுமின் நிலையம் மற்றும் பிற நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டிதரப்படும் என்று அப்பாவு தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ் . ஆர் ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் துரைசாமி ,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பத்மப்ரியா, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கமலா சுயம்பு ராஜன், தொழிலதிபர் தங்கையா கணேசன், பள்ளி தாளாளர் சுயம்பு ராஜன், குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் உட்பட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
Image source: dailythanthi.com