Logo of Tirunelveli Today

திருநெல்வேலியின் புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு!

April 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக திரு.சந்தோஷ்குமார் பொறுப்பேற்பு.
  • மாநகர சட்டம் - ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை.

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த திரு.துரைகுமார் அவர்கள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு மாற்றாக சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த திரு.சந்தோஷ்குமார் அவர்களை திருநெல்வேலி மாநகர புதிய காவல்துறை ஆணையாளராக தமிழக அரசு நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது.

இதனை அடுத்து திருநெல்வேலி மாநகர புதிய காவல்துறை ஆணையாளராக திரு.சந்தோஷ்குமார் அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை திருநெல்வேலி காவல்துறை சரக டி.ஐ.ஜி. திரு.பிரவேஷ்குமார் அவர்கள், மாநகர கிழக்கு மண்டல காவல்துறை துணை ஆணையாளர் திரு. டி.பி.சுரேஷ்குமார் அவர்கள், கூடுதல் துணை ஆணையாளர் திரு.சங்கர் அவர்கள், காவல்துறை உதவி ஆணையாளர் திரு.நாகசங்கர் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்ட திரு.சந்தோஷ்குமார் அவர்கள், திருநெல்வேலி மாநகர சட்டம் - ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify