செய்திக்குறிப்புகள்:
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தல்.
திரு. சரவணன் அவர்கள் போட்டியின்றி தேர்வு.
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்றதை அடுத்து மாநகராட்சிக்கான மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் தி.மு.க சார்பாக போட்டியிட்ட சரவணன் அவர்கள் போட்டியின்றி புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் வழங்கி, புதிய மேயராக திரு. சரவணன் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ராஜூ அவர்களும் பதவி ஏற்றுக்கொண்டார்.