செய்திக்குறிப்புகள்:
- புதிய தேர் செய்யும் பணி நிறைவு.
- பாளையங்கோட்டையில் பக்தர்கள் மத்தியில் வெள்ளோட்டம்.
பாளையங்கோட்டையில் அமையப்பெற்றுள்ளது பழம்பெருமை வாய்ந்த அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும்
பங்குனி உத்திரம் அன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெறும் நிலையில் தேர் பழுதடைந்த காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய தேர் ஓடவில்லை.
இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று கோபாலன் கைங்கர்ய சபாவினர் மூலம் பக்தர்களின் ஒத்துழைப்புடன் திருக்கோவில் வளாகத்தில் வைத்து புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று வந்தது. 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை கொண்ட புதிய மரத்தேர் தயாரான நிலையில் நேற்று காலை வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Image Source: dailythanthi.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.