கொரோனா நோய் தொற்று தற்போது பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாநகரில் விதிமுறைகளை மீறி மக்கள் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் சாலைகளில் பயணித்து வருகிறார்கள். ஊரடங்கை கண்காணிக்க மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தற்காலிக சோதனை சாவடிகள் ஏற்படுத்தி மக்களை கண்காணித்து வருகிறார்கள். எனினும் நேற்றும் சாலைகளில் பயணிக்கும் மக்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர காவல்துறையினர் நேற்று அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் பயணம் மேற்கொண்ட நபர்களை தடுத்து நிறுத்தி அவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்தும், தேவையில்லாமல் சாலையில் பயணம் செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைத்தும், எழுத்துபூர்வமாக உறுதிமொழி எழுத வைத்தும் அவர்களுக்கு நூதன தண்டனைகள் வழங்கி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று முதல் மாநகர சாலைகளில் அத்தியாவசிய தேவையின்றி பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.