Logo of Tirunelveli Today

நெல்லையில் முதன்முறையாக 44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

June 17, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம் :

  • திருநெல்வேலி மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை மாதம் நடைபெறுகிறது
  • தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக 15 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்பு

பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான முறையில் நேரம் செலவிடுவதற்கான விளையாட்டு கல்வியை தேர்ந்தெடுத்து
பயிற்றுவிக்க கற்றுக்கொடுப்பது என்பது பெற்றோர்களின் தலையாய கடமை. அப்படிப்பட்ட விளையாட்டு கலையில்… அறிவையும் சார்ந்து விளையாடக்கூடிய மிக அற்புதமான ஒரு விளையாட்டு செஸ் விளையாட்டு.
இதை ஊக்குவிக்கும் வகையில்…

திருநெல்வேலி மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 44வது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

இந்த செயல் ஆக்கத்திற்கான தேர்வு போட்டி பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட சதுரங்க முன்னேற்ற கழக தலைவர் ராமச்சந்திரன் போட்டியை தொடங்கி வைக்க..
செயலாளர் பாலகுமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வம் மணிகண்டன் நடுவராக செயல்பட்டார்.
இணைய செயலாளர்கள் மற்றும் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினார்கள்

இந்த உற்சாகமான போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். என்றும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் . இதில் 25 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியருக்கு பரிசு கோப்பைகளும் வழங்கப்படுகின்றன

போட்டி முடிவில் சிறந்த ஒரு மாணவன் ஒரு மாணவி தேர்வு செய்யப்பட்டு மாமல்லபுரம் ஒலிம்பியாட் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். போட்டிக்கு 15 வயதிற்கு உட்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் தலா இரண்டு பேர் வீதம் என தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாகவும் அனுப்பப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆழமான கருத்துக்கள் அழகாய் ஏற்றுக்கொண்டு , அடுத்தது என்ன என்று ஆர்வமாய் ஆச்சரியத்தோடு ‌கண்களை உயர்த்தும் பெற்றோருக்கு திருநெல்வேலி டுடே விழிப்புணர்வு கருத்து வெளியிட்டுள்ளது

சொல் விளையாட்டு , பழமொழி விளையாட்டு ,புதிர் விளையாட்டு, வினா விடைகள் , செஸ் விளையாட்டு என அறிவூட்டும் விளையாட்டையும் வளரும் குழந்தைகளிடையே புகுத்தி நல்ல சிந்தை அறிவுள்ள எதிர்கால இளைஞர் (ஞி ) களாய் மலரவைத்து தலைசிறந்த இந்தியாவை உருவாக்குவோம்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify