Logo of Tirunelveli Today

நெல்லையில் எட்டு வட்டங்களில் ஜமாபந்தி திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி

June 4, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம் :

  • ஜமாபந்தி திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்
  • நெல்லை சுற்று வட்ட மக்களின் 45 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் ஜமாபந்தி முறை நலத்திட்டம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

ஜமாபந்தி முறை நலத்திட்ட உதவிகளை திருநெல்வேலி வட்டத்தில் 60 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (நில அளவை) வாசுதேவன் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) வெங்கடாசலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் வாசுதேவகி திருநெல்வேலி வட்டாட்சியர் சண்முக சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் மதவ குறிச்சி குருவட்டத்திற்கு உட்பட்ட புதூர் , சீதபற்பநல்லூர் சிறுக்கன்குறிச்சி கருவநல்லூர் சிவனியார்ர்குளம், துவ ராசி ,திருப்பணிகரிசல்குளம் , கருவேலன்குளம் , துலுக்கர்குளம் , வாகைகுளம் , உகந்தன் பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களிடம் பெறப்பட்ட 45 மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் .

மேலும் தொடர்ந்து நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில்…‌

மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், 9 பேருக்கு குடும்ப அட்டைகள் என மொத்தம் 60 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

18 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்த13 பேருக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்ட வரன்முறை செய்த பட்டாக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பயனாளிகளுக்கு வழங்கினார்..

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify