Logo of Tirunelveli Today

நெல்லையில் அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி!

May 31, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு வீடு வீடாக சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அரசு அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் காய்கறிகள்  வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள காரணத்தால், வீடுகளுக்கே சென்று பலசரக்கு பொருட்களையும் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திருநெல்வேலி மாநகரில் சுமார் 300 வியாபாரிகளுக்கு வாகனங்கள் மூலம் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் வாகனங்கள் மூலம் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் அரசாங்கம் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து, ஊரடங்கு காலம் முடியும் வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பலசரக்கு பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர பகுதிகளில் முதல்கட்டமாக தொடங்கப்படும் இந்த சேவை, மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify