Logo of Tirunelveli Today

நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா

July 26, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கண்ணாடி வளையல்கள் கலகலக்க 'அம்பாள் ஊஞ்சல் உற்சவம்' கண்முன்னே காண கண் கோடி வேண்டும்' எனும் ஆனந்தமாய் கொண்டாடும் நிகழ்ச்சி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை ஒட்டி நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 22 ஆம் தேதி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. நேற்று காந்திமதி அம்மனுக்கு கர்ப்பிணி பெண்கள் கொண்டாடும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கான வைபோக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதிகாலையே காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்கார தீபாராதனைகள் நிகழ்த்தப்பட்டு பக்தர்கள் அம்மனை பரவசத்தோடு தரிசனம் செய்தனர்.

மதியம் 12 மணிக்கு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்ற வைபவம் சிறப்பாக நடைபெற்றது.  அதை அடுத்து அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மன் எழுந்தருள, வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் ஆர்வத்தோடு அம்பாளுக்கு வளையல்கள் அளிக்க காந்திமதி அம்மன் மிக அழகாக கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தது பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியின் முடிவில் தீபாராதனை காட்டப்பட்டது.

காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் இரவு 8 மணிக்கு வீதி உலா வர... பக்தர்கள் அனைவரும் அம்மனை பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் அம்மனுக்காகவே அதிக நேரம் செலவிடுங்கள். அதில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். உவகை அடைவீர்கள். உள்ளத்தில் உறங்கிய கவலைகள் நீங்கப் பெற்று புதிய வரங்கள் பெறப்பட்டு, வாழ்வில் அனைத்து செல்வ வளங்கள் பெற்று, வாழ்வினில் நிறைவு காணுங்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify