செய்தி சுருக்கம்
- நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந் திருவிழா வருகிற 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 11ஆம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறும்
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா நடப்பதற்கு முன்பாக கோவிலில் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம் .
தொடர்ந்து பிள்ளையார் திருவிழா முதல் மூவர் திருவிழா நடைபெறும் .பிடாரி அம்மன் கோவிலில் திருவிழா முடிந்து நேற்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
இதையொட்டி நேற்று காலை ஆறு மணிக்கு சுவாமி சன்னதியில் உள்ள சிறிய கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது . தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவில் பிள்ளையார் மூச்சு ஒரு வாகனத்தில் பலவண்ண விளக்குகள் ஜொலிக்க , பக்தி பிரவாகமாய் உள்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
.
தினமும் காலையிலும் மாலையிலும் ஸ்வாமி சன்னதி முன்பு உள்ள பெரிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் இரவு பிள்ளையார் மூஞ்சூறு வாகனத்தில் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.
ஆஹா அற்புதமான காட்சி , ஆனந்தக் காட்சி, அகிலமே அடங்கி ஒடுங்கி எம்பெருமானை தரிசிக்கும் காட்சி என மக்கள் அனைவரும் இரு கைகளையும் கூப்பி விநாயகப்பெருமானின் அபிஷேக அலங்கார தீபாராதனை கண்டுகளித்தனர்.