- திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில் தேர் திருவிழா
- தேர்த் திருவிழாவுக்கான விசேஷங்கள் ஆரம்பித்து பந்தக்கால் நடும் வைபவம் இனிதாய் நடைபெற்றது
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவுக்கான பந்தல்கால் நடும் வைபவம் புதன்கிழமை நடைபெற்றது.
நெல்லையப்பர் காந்திமதி அம்மனோடு பவனிவரும் திருவிழா கண்கொள்ளாக்காட்சியாய், காண்பவர் மனதை பக்தி பரவசம் அள்ளும் நெகிழ்வோடு தரிசனம் காணும் மிக அழகான திருவிழா.
தேர் திருவிழாவையொட்டி கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு கோவில் யானை முன் செல்ல ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்தில் நடப்பட்டது.
இப்படிப்பட்ட விசேஷ நாட்களில் நாம் காலையில் கங்காஸ்நானம் செய்வது சிறப்பு. நம்முடைய பாவங்கள் தோஷங்கள் விலகுகின்ற அற்புதமான ஸ்நானம்.
ஸ்நானம் செய்வதற்கு முன்பாக ஒரு குவளை நீரை எடுத்து புனிதமான கங்கை நீராக மனதால் நினைத்து நம்முடைய மோதிரவிரலால்' ஓம்' எனும் எழுத்தை எழுதி தலையிலே ஸ்நானம் செய்யும் போது கங்கை நீரில் ஸ்நானம் செய்த சக்தியையும் அருளும் நமக்கு கிடைக்கும்.
இவ்வாறு தெய்வீக ஸ்நானம் செய்தபிறகு கோவில் தரிசனம் காண்பது என்பது என்றும் வாழ்க்கையில் சுபிட்சத்தை கொடுக்கும். நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலுக்கு சென்று தரிசித்து வாழ்க்கையில் அனைத்து நலன்களும் பெற்று நலமாய் நாம் பெறுவோம்.