Logo of Tirunelveli Today

உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கம் அளிக்கும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

May 30, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம்.
  • இதை முன்னிட்டு நெல்லை தேசிய மாணவர் படை சார்பில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இளமையின் ரகசியம் எது? என யோகா கலை கற்றவர் இடத்தில் கேட்டால்…

'நினைவகமுடல் (நினைவு+அகம்+உடல்) அனைத்தும் தஞ்சம் புகுந்து, உற்சாகம் கொடுத்து உடல் எழுச்சி பெற ஆரோக்கியம் தரும் யோகா பயிற்சி மேற்கொண்டால் இது சாதகமாகும்' என்பார்கள் ‌

அவ்வளவு உடலுக்கு உள்ளத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய யோகா பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக உலகெங்கும், ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகின்றது.

இதை மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக பாளையங்கோட்டை ஜான்சி கல்லூரியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு , நெல்லை தேசிய மாணவர் படை 5-வது பட்டாலியன் அணி சார்பில் யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிதீஷ்குமார் தலைமையில் யோகா பயிற்சியாளர் சுதா நேற்று பொது மக்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்தார்.

இந்த தருணத்தில் 'யோகா எனும் கலை அறிவோம். அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம். அதன் பலம் பற்றி அறிந்து வாழ்வில் மென்மேலும் சாதனைகள் பல பெறுவோம்' எனும் விழிப்புணர்வு கருத்தை திருநெல்வேலி டுடே மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify