Logo of Tirunelveli Today

1 நிமிடம் 33 வினாடிகளில் வேதியியலில் 118 தனிமங்களையும் கூறி நெல்லை மாணவன் சாதனை

September 5, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லையில் ஒரு நிமிடம் 33 வினாடிகளில் வேதியியல் அட்டவணையில் 118 தனிமங்களையும் கூறி ஆறு வயது சிறுவன் சாதனை புரிந்துள்ளார்.
  • ஆசிய புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்ற சிறுவனுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ஒரு நிமிடம் 33 வினாடிகளில் வேதியியல் அட்டவணையில் 118 தனிமங்களையும் கூறி ஆறு வயது சிறுவன் சாதனை புரிந்துள்ளார். ஆசிய புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்ற சிறுவனுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு பாராட்டு தெரிவித்துள்ளார் .

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உதவி பேராசிரியராகவும் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு நிபுணராகவும் பிரபுராஜ் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவ ஆர்த்தி ஹரிப்பிரியா பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் . இவர்களுடைய மகன் சதுர்கிரிஷ் ஆத்விக் (வயது 6) சிறுவயதிலேயே திருக்குறளை மனப்பாடமாக படித்து சாதனை புரிந்துள்ளார்.

3 வயதில் 30 நிமிடத்தில் 53 திருக்குறளையும், 41/2 வயதில் 5 நிமிடம் 40 வினாடிகளில் 100 திருக்குறள்களையும் கூறி சாதனை படைத்துள்ளார் .

நமது நாட்டில் உள்ள பல மாநிலங்கள் அதன் தலைநகரங்கள் மற்றும் உலக நாடுகள் அதன் தலைநகரங்கள் என அனைத்தையும் குறுகிய நேரத்தில் கூறி சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்,குளோபல் ரெக்கார்ட்ஸ், சர்ச் ரிசர்ச் பவுண்டேஷன் அனைத்தும் சதுர்கிரிஷ் ஆத்விக் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தெரிவித்து கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி உள்ளது.

தற்பொழுது ஒரு நிமிடம் 33 வினாடிகளில் வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களையும் கூறி ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியாளர் விஷ்ணு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சதுர்கிரிஷ் ஆத்விக் பள்ளிப் பாடங்கள் விரைந்து கற்றுக் கொண்டதால் திருக்குறளை கற்றுக் கொடுக்க ஆர்வம் எங்களுக்கு ஏற்பட்டது. தாய் மொழியான தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக திருக்குறளை கற்றுக் கொடுத்து வருகின்றோம். விரைவாக 1330 திருக்குறளையும் குறைந்த நேரத்தில் ஒப்புவிக்கும் நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றோம் என்று மகிழ்ச்சியோடு சதுர்கிரிஷ் ஆத்விக் பெற்றோர் தெரிவித்தனர்.

Image source: dailydhanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify