Logo of Tirunelveli Today

நெல்லை திருச்செந்தூர் ரயில் பயணம் மீண்டும் துவக்கம். பயணிகள் மகிழ்ச்சி.

May 30, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • கொரோனா காரணமாக தடைபட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம் என ரயில்வே சார்பில் அறிவிப்பு
  • பெரும் உற்சாகத்தில் நெல்லை திருச்செந்தூர் பயணிகள்

இரண்டு ஆண்டுக்கு முன்பு சொந்தபந்தங்கள் ஒருவர் வீடு ஒருவர் வந்து கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தோம். செய்த பலகாரங்கள் பரிமாறிக்கொண்டோம். ஒன்றாகக் கூடி பொழுதுபோக்காக சுற்றிக் கொண்டிருந்தோம். கோவில் குளம் என வயதானவர்களை அழைத்துக்கொண்டு புண்ணிய தலங்களுக்கு சென்று வந்தோம். அனைத்துக்கும் ரயில் பயணம் நமக்கு கை கொடுத்தது.

ஆனால் கொரோனா வந்த பிறகு நம்மால் சுதந்திரமாக எங்கும் வெளியே செல்ல முடியாது கூண்டுக்கிளி போல் அடைப்பட்டு கிடந்தோம். இப்பொழுது மீண்டும் பழைய வாழ்க்கை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த பெரும்பாலான ரயில்கள் நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றது.

தென் மாவட்டங்களில் ரயில்கள் அனைத்தும் தற்போது சிறப்பு ரயில்களாகவும் எக்ஸ்பிரஸ் ரயிலாகவாம் மாற்றி கூடுதல் கட்டணதொகையோடு இயக்கப்பட்டு வருகிறது.

நெல்லையிலிருந்து காலை 7:20 மணிக்கு ரயில் புறப்பட்டு 9 .05 மணிக்கு திருச்செந்தூர் அடைதல். மீண்டும் திருச்செந்தூரில் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு நெல்லை அடைதல்

இதே போல் நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கும் மறுமார்க்கத்தில் மாலை 5:30 மணிக்கு செங்கோட்டையிலிருந்தும் இரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. .

இரண்டு வழித்தடங்களில் ரயிலை நான்கு முறை இயக்க வேண்டும் என்று அம்பை, தென்காசி, வீர நல்லூர், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி ஆழ்வார்குறிச்சி ஆகிய பகுதிகளில் அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள் என்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி செங்கோட்டை திருச்செந்தூருக்கு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி செங்கோட்டை நெல்லை பயணிகள் ரயில் காலை 6:40 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு காலை 8:50க்கு நெல்லை வந்ததடையும்.

மறு மார்க்கம் செங்கோட்டை பயணிகள் ரயில் மாலை 6:15 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு இரவு 8. 35க்கு செங்கோட்டை வந்ததடையும்.

Image source: India Rail Info

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify