Logo of Tirunelveli Today

நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் இடமாற்றம்!

May 31, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான காய்கறிகளை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே நேரில் சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளிலும் இதனை பின்பற்றி, அனுமதி பெற்ற வியாபாரிகள் மூலம் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வியாபாரிகள் அனைவரும் விற்பனைக்கு தேவையான காய்கறிகளை வாங்க ஒட்டுமொத்தமாக நெல்லை மாநகரில் உள்ள நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் குவிகிறார்கள். இதனால் சமூக இடைவெளி இன்றி கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள், மாநகர காவல்துறை ஆணையர் திரு.பிரவீன்குமார் அபிநபு அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் ஆகியோர் காய்கறி வியாபாரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நெல்லை டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த 60 சில்லறை விற்பனை கடைகள், சாப்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டன. நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையும், சாப்டா் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தற்காலிக கடைகள் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடைகளில் அனுமதி பெற்ற வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறிகளை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify