செய்தி சுருக்கம் :
- நெல்லையில் புதிய நவீன பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை தொடங்கியது
- பஸ் நிறுத்தம் பூமி பூஜையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ பங்கேற்றார்.
செல்வாக்கு, புகழ் இருந்தாலும் மக்கள் நினைப்பதை உணர்ந்து செயலாற்றும் நலன் படைப்பதில் எம்எல்ஏக்களின் பங்கு நிறைவாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மகத்தான சில பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இதன்படி பாளையங்கோட்டை நவீன பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. இதில் அப்துல் வகாப் எம். எல் ஏ பங்கேற்றார்.
பாளையங்கோட்டை கதீட்ரல் பள்ளி அருகே நன்கொடையாளர்கள் பங்களிப்பு மூலமாக நவீன பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை அடிகோல் நாட்டு விழா நடைபெற்றது .
இதில் மாவட்ட திமுக செயலாளர் எம்.எல்.ஏ அப்துல் வகாப் கலந்து கொண்டு பூமி பூஜைக்கான அடிக்கல் நாட்டு பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் பி. எம் சரவணன், துணை மேயர் கே ஆர் ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் , தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, மண்டல உதவி ஆணையர் லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
இந்த நவீன புதிய பஸ் நிறுத்தம் நெல்லை மாவட்டத்தில் சுற்றி இருக்கும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமையும் என்பதால் விரைவில் பணி முடிய வேண்டும் என்பது நெல்லை மக்களின் எதிர்பார்ப்பு.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.