Logo of Tirunelveli Today

நெல்லை மாவட்டத்தில் உரக்கடைகள் திறக்க அனுமதி

May 28, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை மாவட்டத்தில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கார் பருவ சாகுபடி தொடங்க உள்ள நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைத்திட வசதியாக, விவசாயத்துக்கு தேவையான விதை, உரம், பூச்சி கொல்லி மருந்துகள் தங்கு தடையின்றி கிடைத்திட வசதியாக அனைத்து உரக்கடைகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் தற்போது தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விவசாய தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது உரக்கடைகளை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்தில் நேற்று அரசு அனுமதி பெற்ற 277 தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளும் திறக்கப்பட்டு, அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உரக்கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான உரம் மற்றும் இது பொருட்களை வாங்கிச்சென்றனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify