நெல்லை மாவட்டத்தில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கார் பருவ சாகுபடி தொடங்க உள்ள நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைத்திட வசதியாக, விவசாயத்துக்கு தேவையான விதை, உரம், பூச்சி கொல்லி மருந்துகள் தங்கு தடையின்றி கிடைத்திட வசதியாக அனைத்து உரக்கடைகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் தற்போது தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விவசாய தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது உரக்கடைகளை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்தில் நேற்று அரசு அனுமதி பெற்ற 277 தனியார் மற்றும் கூட்டுறவு உரக்கடைகளும் திறக்கப்பட்டு, அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உரக்கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான உரம் மற்றும் இது பொருட்களை வாங்கிச்சென்றனர்.