Logo of Tirunelveli Today

நெல்லை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நேற்று மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்!

June 4, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழகத்தை பசுமையாகும் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் உயரமான மரக்கன்றுகளை நடும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் படி நெல்லை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, நேற்று முதல்கட்டமாக கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலய பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆல மரம், புங்கை மரம், வேங்கை மரம், கொடுக்காப்புளி மரம், நாவல் மரம் உள்ளிட்ட ஆயிரம் எண்ணிக்கையிலான உயரமான மரங்கள் நடப்பட்டது. மேலும் மீதமுள்ள 99 ஆயிரம் மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும் விரைவில் நட்டு வைக்கும் பணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவருடன், கூடுதல் முதன்மை, தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் திரு.யோகேஷ் சிங், வனப்பாதுகாவலர் திரு.செந்தில்குமார், மாவட்ட வன அலுவலர் திரு.கெளதம், வனச்சரக அலுவலர் திரு. கருப்பையா, நெல்லை தாசில்தார் திரு.பகவதி பெருமாள் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify